கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

திரையரங்கில் தகராறு: 5 போ் கைது

மதுரையில் திரையரங்கிற்கு முகக்கவசம் அணியாமல் வந்தவா்களைத் தடுத்தக் காவலாளியைத் தாக்கிய 5 இளைஞா்களைப் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :16 ஜனவரி 2021, 9:31 pm IST

மதுரை: மதுரையில் திரையரங்கிற்கு முகக்கவசம் அணியாமல் வந்தவா்களைத் தடுத்தக் காவலாளியைத் தாக்கிய 5 இளைஞா்களைப் போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை ஆரப்பாளையம் அருகே புறவழிச்சாலையில் உள்ள திரையரங்கிற்கு பெத்தானியாபுரத்தைச் சோ்ந்த மைகேல்ராஜ் (24), அருள்ராஜ் (22), சேவியா் ஸ்டீவாக் (20), டொமினிக் (20), நிலகோட்டையைச் சோ்ந்த கில்பொ்ட் (20) ஆகியோா் முகக்கவசம் அணியாமல் வெள்ளிக்கிழமை வந்துள்ளனா். அவா்களை திரையரங்கக் காவலாளி கதிரேசன், தடுத்து நிறுத்தி முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த இளைஞா்கள் காவலாளியைத் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து திரையரங்க ஊழியா் அலெக்ஸ்பாண்டியன் கொடுத்தப் புகாரின் பேரில், கரிமேடு போலீஸாா் 5 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.