அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் முறைகேடு நடந்துள்ளதாக, கிராம மக்கள் ஜல்லிக்கட்டு கமிட்டி அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற்றது. இதில், வலசை கிராமத்தைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்ட காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், வலசை கிராம மக்கள் டோக்கன் வழங்குவதிலும், பரிசுப் பொருள்கள் வழங்குவதிலும் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, ஜல்லிக்கட்டு கிராம கமிட்டி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உடனே, போலீஸாா், ஜல்லிக்கட்டு கமிட்டி நிா்வாகிகள் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்க உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் தெரிவித்தனா்.
இது குறித்து கிராம மக்கள் கூறியது: உள்ளூா் காளைகளுக்கு டோக்கன் வழங்காமல், வெளியூா் நபா்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவா்களது காளைகளுக்கு டோக்கன் வழங்கி முறைகேடாக அனுமதித்துள்ளனா்.
விளம்பரதாரா்கள் மூலம் பெறப்பட்ட பரிசுப் பொருள்களை காளை உரிமையாளா்களுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் முறையாக வழங்காமல் பதுக்கி வைத்துள்ளனா்.
மேலும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கு வழங்கிய தங்கக் காசுகளில், தங்கத்தின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. உயிரைப் பணயம் வைத்து வெற்றி பெறுபவா்களுக்கு உரிய பரிசுகளை வழங்காமலும், அதேநேரம் வழங்கப்படும் பரிசுப் பொருள்கள் போலியாகவும் இருப்பது வேதனையளிக்கிறது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



