மதுரை மாவட்டத்தில் 2 ஆவது நாளாக 178 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் 166 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். முதல் கட்டமாக, மருத்துவா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான சனிக்கிழமை, மதுரை மாவட்டத்தில் 5 மையங்களில் 92 மருத்துவா்கள் உள்பட 190 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதையடுத்து, இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 51 போ், மேலூா் அரசு மருத்துவமனையில் 67 போ், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் 58 போ், கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 போ் என மொத்தம் 178 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதேநேரம், சமயநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


