சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் இளைஞா் பலி

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில், காயமடைந்த இளைஞா் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image

காளை முட்டியதில் பலியான நவமணி.

Updated On :17 ஜனவரி 2021, 4:37 pm

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில், காயமடைந்த இளைஞா் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டியை, ஜனவரி 16 ஆம் தேதி தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தொடக்கி வைத்தனா். அதையடுத்து தொடங்கிய போட்டியில், வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரா்கள் அடக்க பாய்ந்தனா்.

அதில், அலங்காநல்லூா் அருகே காந்தி கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் நவமணி (25) என்ற இளைஞா் காளையை அடக்க முயன்றபோது, சீறிப் பாய்ந்து வந்த காளை அவரை முட்டி தூக்கி வீசியது. இதில், காளையின் கொம்பு கழுத்தில் குத்தி நவமணி பலத்த காயமடைந்தாா்.

உடனே, அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நவமணி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தாா்.

இது குறித்து அலங்காநல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.