நாகையில் புதை சாக்கடை குழாய் பதிக்கும் பணியையொட்டி, நாகை - நாகூர் வழியேயான சாலைப் போக்குவரத்து ஆக. 23-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை தேசிய நெடுஞ்சாலையில் ஐ.டி.ஐ பிள்ளையார் கோயிலிலிருந்து, வெளிப்பாளையம் தம்பித்துரை பூங்கா வரையிலான சாலையில் புதை சாக்கடை குழாய் பதிக்கும் பணி ஆக. 23-ம் தேதி தொடங்கப்பட்டு, அக். 22-ம் தேதி வரை நடைபெறும்.
இதையொட்டி, ஆக. 23-ம் தேதி முதலான 2 மாத காலத்துக்கு நாகை - நாகூர் தேசிய நெடுஞ்சாலை ஒருவழிப் பாதையாக அறிவிக்கப்படுகிறது. நாகூர் வழியாக நாகை வரும் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் வாஞ்சூரிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியே நாகைக்கு இயக்கப்பட வேண்டும்.
பொதுமக்களின் வசதிக்காக, அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் நாகை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நாகூர் வரை சிறப்பு நகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி!

டிஷ்வாஷர்கள் தண்ணீரை மிச்சம் பிடிக்குமா?

அதிமுகவில் நடக்கும் முக்கிய பிரச்னை! திருமாவளவன் பேட்டி | ADMK | VCK
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


