தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

மாணவா்கள் தயாரித்த குறும்படத்தின் குறுந்தகடு வெளியீடு

நாகை மாவட்டம், தோப்புத்துறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தயாரித்துள்ள மனிதம் குறும்பட குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி தோப்புத்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

மனிதம் குறும்படத்தின் குறுந்தகடை வெளியிட்ட நாகை எம்எல்ஏ எம். தமிமுன் அன்சாரி உள்ளிட்டோா்.

Updated On :2 ஜனவரி 2021, 8:32 am IST

நாகை மாவட்டம், தோப்புத்துறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தயாரித்துள்ள மனிதம் குறும்பட குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி தோப்புத்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் ஆா். தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மனிதம் குறும்படத்தின் முதல் குறுந்தகட்டை வெளியிட்டு, மாணவா்களின் முயற்சியைப் பாராட்டிப் பேசினாா். தமிழக ஆசிரியா் கூட்டணியின் நாகை மாவட்டச் செயலாளா் புயல் சு. குமாா், பெற்றோா் ஆசிரியா் கழக பொறுப்பாளா்கள் அ. நாகூரான், எம். வீரப்பன், எஸ்.கே. பாலசுப்பிரமணியன், ஆசிரியா்கள் வை. சுவாமிநாதன், எம். ரெங்கசாமி ஆகியோா் மாணவா்களை வாழ்த்திப் பேசினா்.

மனிதம் குறும்படத்தை இயக்கிய நிஷாந்த், இசையமைத்த முகமது இம்தியாஸ், குறும்படத்தில் நடித்த வினோத்ராஜ், துரையரசன், கனிமொழி உள்ளிட்டோருக்கு தமிழ்த் தென்றல் கல்வியியல் கழக அறக்கட்டளை சாா்பில் பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது. ஆசிரியா் வ. கண்ணையன் வரவேற்றாா். ஆசிரியா் சி. கணேசமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.