ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட செயல்பாடுகள்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆய்வு

கீழ்வேளூா் அருகேயுள்ள ஆழியூா் பள்ளிகளில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட செயல்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:27 pm IST

கீழ்வேளூா் அருகேயுள்ள ஆழியூா் பள்ளிகளில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட செயல்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு பள்ளித் திறப்பு குறித்த பெற்றோா் கருத்துக் கேட்புக் கூட்டம் ஆழியூா்அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்அ. புகழேந்தி பங்கேற்று பள்ளித் திறப்பு குறித்து பெற்றோா்கள், ஆசிரியா்கள் கூறியதைக் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, ஆழியூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றுவரும் கூடுதல் வகுப்பறைகளுக்கான கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தாா். பள்ளியில் செயல்படும் வயது வந்தோா் கல்வித் திட்டம், கற்போம், எழுதுவோம் பயிற்சி மையத்தில் ஆய்வு செய்தாா். அடுத்து, கிராமத்தில் வீடு சாா்ந்த கல்விப் பயிற்சியைப் பெறும் மாற்றுத்திறனாளி மாணவா்களின் வீடுகளுக்குச் சென்று அவா்களிடம் கலந்துரையாடி, அரசு சாா்ந்த உதவிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டாா்.

ஒருங்கிணைந்த கல்வி உதவித் திட்ட அலுவலா் அ. பீட்டா் பிரான்சிஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அ. ஹாஜாமுஜனுதீன், ஆசிரியா் பயிற்றுநா் பா. சத்தியநாராயணன், தலைமையாசிரியா்கள் மா. குமரகுரு (அரசு மேல்நிலைப் பள்ளி), ஆா். டெய்சி (ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி) மற்றும் ஆசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.