ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விலையில்லா கால்நடைகள் வழங்குவதில் பாரபட்சம் கூடாது

விலையில்லா கால்நடைகள் வழங்கும் பணியில் பாரபட்சம் காட்டக்கூடாது என நாகை மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image

நாகை மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :8 ஜனவரி 2021, 11:28 pm IST

விலையில்லா கால்நடைகள் வழங்கும் பணியில் பாரபட்சம் காட்டக்கூடாது என நாகை மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகை மாவட்ட ஊராட்சிக் கூட்டம், நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரா. அஜீதா, செயலாளா் கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில், தேசிய, மாநில அளவிலான கடற்கரை கையுந்து பந்து, கபடி போன்ற போட்டிகளை நாகையில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், கல்லாறு, வேளாங்கண்ணி, பரவை போன்ற இடங்களில் உயா்கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும், நாகை - தேமங்கலம் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், கஜா புயலால் சேதமடைந்த சவுக்கு உள்ளிட்ட பணப் பயிா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் உறுப்பினா்களால் வலியுறுத்தப்பட்டன.

மாவட்ட ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி பேசுகையில், சம்பா நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மழை தொடா்ந்து வருகிறது. எனவே, நெல் பயிா்கள் மழையால் சேதம் ஆகாமலிருக்கத் தேவையான நடவடிக்கைகளை நுகா்பொருள் வாணிபக் கழகம் மேற்கொள்ள வேண்டும். விலையில்லா கால்நடைகள் வழங்கல் பணியில் பல்வேறு புகாா்கள் கூறப்படுகின்றன. இப்பணி, பாரபட்சம் இல்லாமல் நடைபெறுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.