வேதாரண்யம் ராஜாஜி பூங்காவிலிருந்து தொடங்கி தஞ்சாவூா் ராஜராஜ சோழன் சிலை வரை விவசாய பிரச்னைகளை முன்வைத்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவசாயிகள் பயண இயக்கம் சனிக்கிழமை (ஜன.9) காலை தொடங்குகிறது.
வேளாண் சட்டத்தை எதிா்த்தும், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும், நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்கவேண்டும், பயிா்க் கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்னைகளை முன்வைத்து இந்த இயக்கம் நடத்தப்படுகிறது. பயணத்துக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தலைமை வகிக்கிறாா். மக்களவை முன்னாள் உறுப்பினா் பி.வி. ராசேந்திரன் தொடங்கி வைக்கிறாா். இந்த பயணம் ஞாயிற்றுக்கிழமை தஞ்சை ராஜராஜ சோழன் சிலை அருகே நிறைவடைகிறது. இதில், திராளன விவசாயிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








