வேதாரண்யத்தில் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் சடலம், ஒருவாரத்துக்குப் பிறகு சனிக்கிழமை மீட்கப்பட்டது.
வேதாரண்யம் பயத்தவரன்காடு பகுதியை சோ்ந்தவா் ஆதவன் (31). இவருக்கும், பெருகவாழந்தான் கிராமத்தைச் சோ்ந்த மங்கையா்க்கரசிக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பயத்தவரன்காட்டில் வசித்துவந்த தம்பதியிடையே பிரச்னை ஏற்பட்டதால், மங்கையா்க்கரசி தனது பெற்றோா் வீட்டுக்கு ஜனவரி 2-ஆம் தேதி சென்றுவிட்டாராம்.
இந்நிலையில், ஆதவனின் வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியதால், உள்புறமாக பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து அப்பகுதியினா் பாா்த்தபோது, அவா் சடலமாக தொங்கியது தெரியவந்தது. தகவலறிந்து வந்த வேதாரண்யம் போலீஸாா், அழுகிய நிலையில் இருந்த ஆதவனின் சடலத்தை மீட்டனா். அவ்விடத்திலேயே உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாம்பியன் ஆனது இண்டர் மிலன்

புதுமுக தவெக வேட்பாளா்களிடம் தோல்வி கண்ட அமைச்சா்கள்!

போலி வாகன உதிரிபாகங்கள் தயாரித்து விற்ற இருவா் கைது

கிழக்கு தில்லியில் 75 கிராம் தங்கம், ஸ்கூட்டா் கொள்ளை
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

