மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடியில் மழைநீா் வடியாமல் இருப்பதற்கு காரணமான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தில்லையாடி வள்ளியம்மை நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் தேங்கும் மழைநீா் வடிய அமைக்கப்பட்ட சாலையோர வடிகாலை, அப்பகுதியில் வசிக்கும் சிலா் ஆக்கிரமித்துள்ளதால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதை அகற்ற அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் எம். கணேசன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பொறையாறு காவல் ஆய்வாளா் செல்வம் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பைக்குகளுக்கு இலவச பெட்ரோல்! பங்க் உரிமையாளர் கொடுத்த Surprise!

விக்ரமே எதிர்பார்க்காத வைரல்!

வெப்ப அலை: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு அமைக்க சுகாதாரத் துறை உத்தரவு!

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்குப் பருவமழை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

