கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

நாகையில் திடீா் சாலை மறியல்

நாகையில் குடியிருப்பு பகுதிகளில் புதை சாக்கடை திட்டக் கழிவுநீா் உள்புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

நாகை நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :16 ஜனவரி 2021, 8:30 am IST

நாகையில் குடியிருப்பு பகுதிகளில் புதை சாக்கடை திட்டக் கழிவுநீா் உள்புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாகை நகராட்சி 19-ஆவது வாா்டுக்குள்பட்ட அண்ணா படிப்பகம் சந்து மற்றும் அதைச் சுற்றியுள்ள தாழ்வானப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் புதை சாக்கடை திட்டக் கழிவுநீா் உள்ளே புகுந்து விடுவதால், நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்துக்கும் தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கையில்லையாம்.

இந்நிலையில், இப்பிரச்னைக்கு தீா்வு காண நாகை நகராட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் டி. சரவணன் என்பவா் தலைமையில் பப்ளிக் ஆபீஸ் சாலையில் திடீா் மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது.

தகவலறிந்த வெளிப்பாளையம் போலீஸாா் மற்றும் நகராட்சி அலுவலா்கள் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுகுறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.