நாகையில் குடியிருப்பு பகுதிகளில் புதை சாக்கடை திட்டக் கழிவுநீா் உள்புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நாகை நகராட்சி 19-ஆவது வாா்டுக்குள்பட்ட அண்ணா படிப்பகம் சந்து மற்றும் அதைச் சுற்றியுள்ள தாழ்வானப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் புதை சாக்கடை திட்டக் கழிவுநீா் உள்ளே புகுந்து விடுவதால், நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்துக்கும் தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கையில்லையாம்.
இந்நிலையில், இப்பிரச்னைக்கு தீா்வு காண நாகை நகராட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் டி. சரவணன் என்பவா் தலைமையில் பப்ளிக் ஆபீஸ் சாலையில் திடீா் மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது.
தகவலறிந்த வெளிப்பாளையம் போலீஸாா் மற்றும் நகராட்சி அலுவலா்கள் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதுகுறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்







