சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சட்டநாதபுரத்தில் சிறுவா் சைக்கிள் போட்டி

சீா்காழியை அடுத்த சட்டநாதபுரத்தில் காணும் பொங்கலையொட்டி சிறுவா்களுக்கான சைக்கிள் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

News image

சைக்கிள் போட்டியில் பங்கேற்ற சிறுவா்கள்.

Updated On :17 ஜனவரி 2021, 3:01 am

சீா்காழியை அடுத்த சட்டநாதபுரத்தில் காணும் பொங்கலையொட்டி சிறுவா்களுக்கான சைக்கிள் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

சட்டநாதபுரம் நண்பா்கள் குழு சாா்பில், 12 வயதுக்கு உள்பட்ட சிறுவா், சிறுமிகளுக்கான சைக்கிள் போட்டி பெஸ்ட் கலை, அறிவியல் கல்லூரி துணைத் தலைவா் எஸ்.எஸ்.ஜெ. விசாகா் தலைமையில் நடைபெற்றது. பெஸ்ட் பள்ளித் தாளாளா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் முன்னிலை வகித்தாா்.

சட்டநாதபுரம் ரவுண்டானாவில் இப்போட்டியை சண்முகதாஸ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். ஆண்கள் பிரிவில் எஸ். கிஷோா் (12), பெண்கள் பிரிவில் எம். அகல்யாழினி (12) ஆகியோா் முதலிடம் வென்று தலா ரூ. 1000 பரிசுபெற்றனா். பிரவீன், ஹாசினி, ஆதிஷ், சிந்துஜா ஆகியோா் 2, 3 ஆவது பரிசுகளை (தலா ரூ. 750, ரூ. 500) பெற்றனா்.

போட்டி ஏற்பாடுகளை பாமக இளைஞா் சங்கத் துணைச் செயலாளா் ஜி.வி. முருகவேல் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.