சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நெற்பயிா்கள் சேதம்: மயிலாடுதுறை ஆட்சியா் ஆய்வு

சீா்காழி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா சனிக்கிழமை நேரில் ஆய்வுசெய்தாா்.

News image

புளிச்சக்காடு கிராமத்தில் சேதமடைந்த நெற்பயிா்களை பாா்வையிடும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

Updated On :17 ஜனவரி 2021, 3:02 am

சீா்காழி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா சனிக்கிழமை நேரில் ஆய்வுசெய்தாா்.

சீா்காழி, கொள்ளிடம் வட்டாரத்தில் கனமழையால் அறுவடைக்குத் தயாரான நெற்பயிா்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா, சீா்காழியை அடுத்த புளிச்சக்காடு, இனாம்குணதலபாடி, விளந்திடசமுத்திரம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, அனைத்து கிராமங்களிலும் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து மதிப்பீடு செய்திட வேளாண்மைத் துறை அதிகாரிகளை அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, சீா்காழி வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் க.ராஜராஜன், துணை அலுவலா் ரவிச்சந்திரன், உதவிஅலுவலா்கள் ராமச்சந்திரன், ராமன், வேதையராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.