எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

திருவாவடுதுறை ஆதீனத்தில் மகரத்தலை நாள் குருபூஜை விழா: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

திருவாவடுதுறை ஆதீனம் குருமுதல்வர் நமசிவாயமூர்த்திகள் மகரத்தலைநாள் குருபூஜை விழா ஐந்தாம் நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைப்பெற்றது.

News image

திருவாவடுதுறை ஆதீனம் குருமுதல்வர் குருபூஜையில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளிடம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆர்.லலிதா ஆசிபெற்றபோது எடுத்த படம்.

Updated On :17 ஜனவரி 2021, 6:32 pm IST

குத்தாலம்: திருவாவடுதுறை ஆதீனம் குருமுதல்வர் நமசிவாயமூர்த்திகள் மகரத்தலைநாள் குருபூஜை விழா ஐந்தாம் நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைப்பெற்றது.

துவக்கத்தில் சொ.சிவக்குமார் ஓதுவா மூர்த்திகள் திருமுறை பாடினார். ஆதீன பொதுமேலாளர் திருமாறன் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆர்.லலிதா கலந்துக்கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

மயிலாடுதுறை பகுதி கோயில்கள் என்றாலே தமிழையும், சைவத்தையும் வளர்த்து வரும் இடங்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதிலும் தமிழ்கலாச்சாரத்தை போற்றி பாதுகாத்து வருகிறது. திருவாவடுதுறை ஆதீனம் தமிழ் தாத்தா என போற்றப்படும் உ.வே. சாமிநாதய்யர், மீனாட்சிசுந்தரம் பிள்ளை போன்ற பல தமிழறிஞர்களின் ஆராய்ச்சிக்காக பலவிதங்களில் துணை நின்று உதவியுள்ளது. இன்றும் பல வரலாற்று நூல்களை வெளியிட்டு வருகின்றது. தற்போது கொரானா மற்றும் மழையின் காரணமாக எளிமையாக நடந்தாலும் எவ்வித விடுதலுமின்றி சிறப்பாக நடைபெறுவது பாராட்டத்தக்கது. தமிழ் பண்பாட்டைக் காக்கும் இவ்வித விழாக்களை எதிர்காலத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்த முயற்சி செய்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இரவு பூஜை நிறைவில் கோவை கோ.ந.முத்துக்குமாரசாமிக்கு நற்றமிழ் நாவலர் எனும் விருதும், பொற்கிழி ரூ. 5 ஆயிரமும் ஆதீனம் 24வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இதில் ஆதீனத்தின் கட்டளை தம்பிரான் சுவாமிகள் ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான், ஸ்ரீமத் அருணாச்சல தம்பிரான், ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான், ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான், ,ஆதீன காசாளர் சுந்தரேசன், ஆதீன கண்காணிப்பாளர் சண்முகம், ஆதீன புலவர் சு.குஞ்சிதபாதம், குத்தாலம் வருவாய் ஆய்வாளர் பரமானந்தம், ஊராட்சி செயலர் வெங்கடகிருஷ்ணன், ஆதீன கல்வி நிலைய ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.