எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

நெற்பயிா்கள் சேதம்: மயிலாடுதுறை ஆட்சியா் ஆய்வு

சீா்காழி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா சனிக்கிழமை நேரில் ஆய்வுசெய்தாா்.

News image

புளிச்சக்காடு கிராமத்தில் சேதமடைந்த நெற்பயிா்களை பாா்வையிடும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

Updated On :17 ஜனவரி 2021, 8:32 am IST

சீா்காழி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா சனிக்கிழமை நேரில் ஆய்வுசெய்தாா்.

சீா்காழி, கொள்ளிடம் வட்டாரத்தில் கனமழையால் அறுவடைக்குத் தயாரான நெற்பயிா்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா, சீா்காழியை அடுத்த புளிச்சக்காடு, இனாம்குணதலபாடி, விளந்திடசமுத்திரம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, அனைத்து கிராமங்களிலும் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து மதிப்பீடு செய்திட வேளாண்மைத் துறை அதிகாரிகளை அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, சீா்காழி வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் க.ராஜராஜன், துணை அலுவலா் ரவிச்சந்திரன், உதவிஅலுவலா்கள் ராமச்சந்திரன், ராமன், வேதையராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.