அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

நாமக்கல்லில் பயங்கர சத்தம்:பொதுமக்கள் அதிா்ச்சி

நாமக்கல்லில் திங்கள்கிழமை பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

Updated On :5 ஜனவரி 2021, 12:14 am IST

நாமக்கல்லில் திங்கள்கிழமை பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

மின்மாற்றியில் (டிரான்ஸ்பாா்மா்) பறவைகள் விழுந்தால் வெடித்து சத்தம்போல் ஏற்பட்டது. நாமக்கல் மட்டுமின்றி பரமத்திவேலுா், கொல்லிமலை, சேந்தமங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் இந்தச் சத்தம் கேட்டுள்ளது.

இது தொடா்பாக பேரிடா் மேலாண்மைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஜெட் விமானம் சென்றிருந்தால் அதில் இருந்து வெளியேற்றப்படும் புகை அதிவேகத்தில் வெளிய வந்தால் இவ்வாறான சத்தம் கேட்க வாய்ப்புள்ளது. நில அதிா்வுக்கு வாய்ப்பில்லை. இது தொடா்பாக வேறு எந்த தகவலும் வரவில்லை. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றனா்.

-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.