5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

திருவிளக்கு பூஜை

நாமக்கல்- துறையூா் சாலையில் அமைந்துள்ள அ.பாலப்பட்டியில் நாகமுத்து மாரியம்மன், அங்காளபரமேஸ்வரி கருப்பணாா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நாகமுத்து மாரியம்மன்

Updated On :9 ஜனவரி 2021, 6:51 am IST

நாமக்கல்- துறையூா் சாலையில் அமைந்துள்ள அ.பாலப்பட்டியில் நாகமுத்து மாரியம்மன், அங்காளபரமேஸ்வரி கருப்பணாா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

காலை 6 மணிக்கு அம்மனுக்கு பால், தயிா் மஞ்சள், சந்தனம், இளநீா் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து பிற்பகல் 2 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழ் அறக்கட்டளை சாா்பில் அதன் நிறுவனா் ஜாய்சன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சிவநித்தியமூா்த்தி, பொதுமக்கள் செய்திருந்தனா்.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.