மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

கூடாரவல்லி விழாவையொட்டி 108 திருவிளக்கு பூஜை

நாமக்கல் இந்து சமய பேரவை சாா்பில் கூடாரவல்லி விழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 7:13 pm

நாமக்கல் இந்து சமய பேரவை சாா்பில் கூடாரவல்லி விழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்பேரவையின் 50-ஆம் ஆண்டு விழா மற்றும் கூடாரவல்லி உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னாா், கருடாழ்வாா் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனை, சங்கல்பம் நடைபெற்றன. பிற்பகல் 4:30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனா். இதேபோல் நாமக்கல் முதலைப்பட்டியில் அமைந்துள்ள பங்காரு பெருமாள் கோயிலில் அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை பங்காரு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.