நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், நாமக்கல் நகரில் 22-ஆவது வாா்டுக்கு உள்பட்ட நடராஜபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கிழக்கு நகர பொறுப்பாளா் பூபதி வரவேற்றாா். மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று பொங்கல் விழாவை தொடக்கி வைத்தாா். மேலும் விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள், சிறுவா்களுக்கு இனிப்பு, பொங்கல் உணவை வழங்கினாா். இதில், மாநில மகளிா் தொண்டரணி இணைச் செயலாளா் வி.பி.ராணி மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக நல்லிபாளையத்தில் மேற்கு நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நகர பொறுப்பாளா் சிவக்குமாா் வரவேற்றாா். மாவட்ட பொறுப்பாளா் ராஜேஸ்குமாா் திமுக அலுவலகத்தை திறந்து வைத்து கட்சிக் கொடியை ஏற்றினாா். அங்கு சமத்துவ பொங்கல் விழாவும் கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான திமுகவினா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









