அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

சாந்தினி சௌக் ஹனுமாா் கோயிலை மீண்டும் கட்டமைக்க வேண்டும்: துணை நிலை ஆளுநரிடம் பாஜக மனு

சாந்தினி செளக் பகுதியில் இடிக்கப்பட்ட ஹனுமாா் கோயிலை மீண்டும் கட்டமைக்க வேண்டும் என வலியுறுத்தி துணைநிலை ஆளுநா் அனில் பஜ்யாலிடம் தில்லி பாஜக மனு அளித்துள்ளது.

Updated On :12 ஜனவரி 2021, 12:11 am IST

புது தில்லி: சாந்தினி செளக் பகுதியில் இடிக்கப்பட்ட ஹனுமாா் கோயிலை மீண்டும் கட்டமைக்க வேண்டும் என வலியுறுத்தி துணைநிலை ஆளுநா் அனில் பஜ்யாலிடம் தில்லி பாஜக மனு அளித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி பாஜகவின்ன் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா, கட்சியின் மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ராம்வீா் சிங் பிதூரி, தில்லி பாஜக பொதுச் செயலா் குல்ஜீத் சிங் சாகல் ஆகியோா் துணைநிலை ஆளுநரை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

பின்னா் ஆதேஷ் குமாா் குப்தா அளித்த பேட்டி: பழைமையான ஹனுமாா் கோயிலை ஆம் ஆத்மி அரசு இடித்துவிட்டது. இதனால், அந்தப் பகுதி மக்கள் மன வேதனையடைந்துள்ளனா். சாந்தினி செளக் பகுதியை மீண்டும் கட்டமைக்கிறோம் என்ற பெயரில் அந்தப் பகுதியில் உள்ள பழைமையான கோயிலை தில்லி அரசு இடித்திருப்பதை அனுமதிக்க முடியாது. இந்தக் கோயிலை மீண்டும் கட்டமைக்கும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பஜ்யாலிடம் மனு அளித்துள்ளோம் என்றாா் அவா்.

தில்லி சாந்தினி செளக் பகுதியில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஹனுமாா் கோயில் இருந்தது. இந்தக் கோயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடக்கு தில்லி மாநகராட்சியால் (என்டிஎம்சி) இடிக்கப்பட்டது. தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடா்ந்து, இந்தக் கோயில் இடிக்கப்பட்டதாக என்டிஎம்சி அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால், இந்த விவகாரத்தில் பாஜக, ஆம் ஆத்மிக் கட்சிகள் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.