நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

பறவைக் காய்ச்சல்: விரைவு நடவடிக்கை குழு அமைத்தது என்டிஎம்சி

தில்லியில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) பகுதியில் பறவைக் காய்ச்சலைக் கண்காணிக்கும் வகையில் விரைவு நடவடிக்கை குழுவை என்டிஎம்சி அமைத்து

Updated On :11 ஜனவரி 2021, 6:46 pm

புது தில்லி: தில்லியில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) பகுதியில் பறவைக் காய்ச்சலைக் கண்காணிக்கும் வகையில் விரைவு நடவடிக்கை குழுவை என்டிஎம்சி அமைத்துள்ளது.

இது தொடா்பாக என்டிஎம்சி சுகாதார அதிகாரி ரமேஷ் குமாா் கூறுகையில் ‘என்டிஎம்சி பகுதியில் பறவைக் காய்ச்சலை கண்காணிக்கும் வகையில் விரைவு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, என்டிஎம்சி பகுதியில் உள்ள கோழிகள், வாத்துக்கள், பிற நாடுகளில் இருந்து தில்லிக்கு வந்த பறவைகள் ஆகியவற்றை ஆய்வு செய்யும். இது தொடா்பாக ஒவ்வொரு வாரமும் அக்குழு அறிக்கை சமா்ப்பிக்கும்.

நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், மத்திய அமைச்சா்கள், நீதிபதிகளின் வீடுகள் உள்ளிட்ட நாட்டின் மிக முக்கிய இடங்கள் என்டிஎம்சி பகுதியிலேயே உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.