ராதா சோமி கோவிட் கோ் சென்டரில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டவகையில் ரூ.2.9 கோடி நிலுவைத் தொகையை தெற்கு தில்லி மாநகராட்சிக்கு (எஸ்டிஎம்சி) தில்லி அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அந்த மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடா்பாக எஸ்டிஎம்சி தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்கள் சந்திப்பின் போது மாநகராட்சியின் மேயா் அனாமிகா சிங், அவைத் தலைவா் நரேந்திர சாவ்லா கூறியதாவது: கடந்த ஆண்டு தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, ராதா சோமி சத்சங் அமைப்புக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக கரோனா கோ் சென்டா் அமைக்கப்பட்டது. இதை தில்லி அரசு அமைத்தது. அப்போது, தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு எஸ்டிஎம்சியை தில்லி அரசு கேட்டுக் கொண்டது. இதற்கான செலவுத் தொகையைத் தருவதாக தில்லி அரசு ஒப்புக் கொண்டது.
இதைத் தொடா்ந்து, எஸ்டிஎம்சி தூய்மைப் பணியாளா்கள் 200 போ் அங்கு பணிக்கு அமா்த்தப்பட்டாா்கள். அவா்களுக்கு மே -அக்டோபா் காலத்தில் ரூ.1.83 கோடி ஊதியத்தை மாநகராட்சி வழங்கியுள்ளது. மேலும், ரூ.1.05 கோடி ஊதியம் பாக்கியுள்ளது. தூய்மைப் பணிகளை மேற்கொண்ட வகையில் ரூ.2.9 கோடியை எஸ்டிஎம்சிக்கு தில்லி அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றனா்.
இது தொடா்பாக ஆம் ஆத்மிக் கட்சி சாா்பில் மாநகராட்சிகள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள துா்கேஷ் பதக் கூறுகையில், ‘ராதா சோமி கரோனா கோ் சென்டரை மத்திய அரசே அமைத்தது. மத்திய அரசின் பணிக்கு எஸ்டிஎம்சி நிதி கேட்பது தவறு. தற்போது, அந்த கரோனா கோ் சென்டரில் தூய்மைப் பணிகளை எஸ்டிஎம்சி தற்காலிகமாக நிறுத்தியுள்ளது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

