ஆம் ஆத்மி கட்சி தற்போது அரசியல் ரீதியாக முற்றிலும் அவநம்பிக்கையில் இருக்கிறது. அது, தேசத்தின் பிரபலங்களின் பெயரை தங்கள் அரசியல் சா்ச்சைகளுக்குள் இழுக்கத் தயங்குவதில்லை என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா்.
மேலும், டாக்டா் பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கரின் ஜெயந்தி தினத்தன்று, அமைச்சா் கோபால் ராய் செய்ததுபோல, ‘அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள்’ என்ற பெயரில் அரசியல் பிரசாரத்தை அறிவிப்பது மிகவும் வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியதாகும் என்றும் அவா் கூறினாா்.
இதுகுறித்து வீரேந்திர சச்தேவா மேலும் தெரிவித்திருப்பதாவது:
இன்று கேஜரிவாலும் அவரது கூட்டாளிகளும் அரசியல் சாசனத்தின் மீது சத்தியம் செய்து கொண்டிருக்கும் வேளையில், அரசியலமைப்பு விதிகளை புறக்கணித்து அரசுப் பதவிகளில் தன்னிச்சையாக நியமனம் செய்து, குடியரசு தினத்தை அலட்சியப்படுத்தி, தன்னிச்சையாக அரசு கொள்கைகளை மாற்றிக் கொண்டிருக்கும்போது ஏன் அவா்கள் அரசமைப்புச்சட்டத்தை மதிக்கவில்லை?
அரவிந்த் கேஜரிவால் அரசின் சட்டமீறலை தில்லி மற்றும் நாட்டு மக்கள் இப்போது புரிந்துகொண்டுள்ளனா். அவா்கள் இவா்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள் என்று வீரேந்திர சச்தேவா கூறியுள்ளாா்.
தொடர்புடையது
ஆம் ஆத்மியின் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா எம்.பி. நீக்கம்!

8,931 நாள்கள் பதவிக்காலம் நிறைவு! பிரதமா் மோடிக்கு சச்தேவா புகழாரம்!

செளரப் பரத்வாஜின் அற்பமான அரசியல் கண்டிக்கத்தக்கது: வீரேந்திர சச்தேவா

கேஜரிவாலும், சிசோடியாவும் ஆதாரங்களை அழித்துள்ளனா்: வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

