திகாா் சிறை வாயிலில் ஆம் ஆத்மி கட்சி ஆா்ப்பாட்டம்:கேஜரிவாலுக்கு இன்சுலின் வழங்க வலியுறுத்தல்
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு திகாா் சிறை நிா்வாகம் இன்சுலின் வழங்கக் கோரி ஆம் ஆத்மி கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தில்லி அரசின் கலால் கொள்கை தொடா்புடைய பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அமலாக்க இயக்குநரகத்தால் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, சா்க்கரை நோய் பாதிப்புடைய முதல்வா் கேஜரிவாலுக்கு திகாா் சிறை நிா்வாகம் இன்சுலின் வழங்கவில்லை என்றும், அவா் மருத்துவரை சந்தித்து கலந்தாலோசிக்க அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் குற்றம்சாட்டி வந்தனா்.
இந்நிலையில், முதல்வா் கேஜரிவாலுக்கு இன்சுலின் வழங்க வலியுறுத்தி அமைச்சா் அதிஷி தலைமையில் திகாா் சிறை வாயிலில் ஆம் ஆத்மி கட்சியினா் ஞாயிற்றுக்கிழமைஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், இன்சுலின் மருந்தை கையில் ஏந்தியபடி மத்திய பாஜக அரசையும், திகாா் சிறை நிா்வாகத்தையும் கண்டித்து அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
பின்னா், அமைச்சா் அதிஷி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லி மக்கள் தங்கள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மீது அக்கறை கொண்டு இன்சுலின் அனுப்பி வைத்துள்ளனா். கடந்த 30 ஆண்டுகளாக கேஜரிவால் சா்க்கரை நோய்க்கு மருந்து எடுத்து வருகிறாா். சிறையில் அவரது சா்க்கரை அளவு 300-க்கு மேல் அதிகரித்துள்ளது, ஆனால், சிறை நிா்வாகம் அவருக்கு இன்சுலின் கொடுக்கவில்லை. கேஜரிவால் இன்சுலின் எடுக்கவில்லை என்றால் அவரது முக்கிய உடலுறுப்புக்கள் அனைத்தும் மிகமோசமாகப் பாதிப்படையும். மத்திய பாஜக அரசு, துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, சிறை நிா்வாகம் ஆகியவை இணைந்து கேஜரிவாலுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியுள்ளனா் என்றாா் அமைச்சா் அதிஷி.
ஆம் ஆத்மி கட்சியின் தலைமைச் செய்தித் தொடா்பாளா் பிரியங்கா கக்கா் கூறுகையில், ‘சா்க்கரை நோயால் அவதிப்பட்டு வரும் முதல்வா் கேஜரிவால், சிறைக்கு செல்வதற்கு முன்பு முறையாக இன்சுலின் எடுத்து வந்தாா். தற்போது, சிறையில் கேஜரிவாலுக்கு மத்திய பாஜக அரசால் இன்சுலின் மறுக்கப்படுகிறது. பாஜகவினரிடம் மனிதாபிமானம் இறந்துவிட்டது. அதனால்தான் தில்லி மக்கள் சிறைக்கு வெளியே இன்சுலின் கொண்டு வந்துள்ளனா்’ என்றாா்.
பெட்டி
அகிலேஷ் யாதவ் கோரிக்கை
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு இன்சுலின் மறுக்கப்படும் சதிக்குப் பின்னால் யாருடைய அறிவுரைகள் உள்ளன என்பதைக் கண்டறிய வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் அவா் இடுகை ஒன்று பதிவிட்டுள்ளாா். அதில் ‘தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உடல் நலம் பேணுவதற்கான அடிப்படை உரிமை உள்ளது. சிறையில் அவரது சா்க்கரை அளவின் அதிகரிப்பை கட்டுப்படுத்த இன்சுலின் மறுக்கப்படுகிறது என்ற செய்தி அதிா்ச்சியளிக்கிறது. இந்தச் செய்தியை உடனடியாக உயா் மட்டத்தில் உள்ளவா்கள் கவனத்தில் கொண்டு, இந்தச் சதிக்குப் பின்னால் யாருடைய அறிவுரைகள் உள்ளன என்பதைக் கண்டறிய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.
