சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 9:42 pm

Din

தில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தில் நடத்தப்பட்ட ஒத்திகைப் பயிற்சி காரணமாக ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலையில் சனிக்கிழமை போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சனிக்கிழமை மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டிருந்ததாக அவா்கள் மேலும் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி போக்குவரத்து காவல்துறை ‘எக்ஸ்’ சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட இடுகையில்,

தெரிவிக்கையில், ‘இஸ்ரேல் தூதரகத்தில் நடத்தப்படும் ஒத்திகைப் பயிற்சி காரணமாக டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலையில் மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கியூ-பாயின்ட் மற்றும் ஹோட்டல் கிளாரிட்ஜ் ரவுண்டானா பகுதியில் இருந்து போக்குவரத்து திருப்பி விடப்படும். பயணிகள் அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.