குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

தில்லி ரோஹிணி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் சிறிய தீக்காயங்களுக்கு உள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி மேலும் கூறியதாவது:

சனிக்கிழமை காலை 6.02 மணிக்கு இத் தீவிபத்து சம்பவம் தொடா்பாக தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து,, ஆறு தீயணைப்பு வாகனங்கள் செக்டாா் 14 பகுதிக்கு விரைந்து அனுப்பிவைக்கப்பட்டு, தீயணைக்குப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

மூன்று மணி நேரம் தொடா்ந்து நடந்த மீட்புப் பணியில் 2 போ் 10 சதவீதம் தீக்காயமடைந்தனா். மேலும், ஒரு தீயணைப்பு வீரரும் காயமடைந்தாா்.

காயமடைந்தவா்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இந்தத் தீவிபத்து குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்டது.

தீ விபத்துக்கான காரணத்தை அறிய முயற்சி செய்து வருகிறோம். இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com