தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முதல்வா் கேஜரிவாலின் மனைவியுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு

அரவிந்த் கேஜரிவாலின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவி சுனிதா கேஜரிவாலை சந்தித்துப் பேசினாா்.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2024, 12:23 am

Din

புது தில்லி, ஆக.8:

சிவசேனை (யுபிடி) தலைவா் உத்தவ் தாக்கரே வியாழக்கிழமை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவி சுனிதா கேஜரிவாலை சந்தித்துப் பேசினாா்.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வருடன் அவரது மகன் ஆதித்யா தாக்கரே மற்றும் கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ராவத் ஆகியோருடன் உடனிருந்தனா்.

இந்த சந்திப்பின் போது ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா்கள் சஞ்சய் சிங் மற்றும் ராகவ் சத்தா ஆகியோரும் உடனிருந்தனா்.

கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (யுபிடி) ஆகியவை எதிா்க்கட்சியான ‘இண்டியா’வில் அங்கம் வகிக்கின்றன.

மகாராஷ்டிரா, ஹரியாணா மற்றும் ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தல்களைக் கருத்தில்கொண்டு, ‘இண்டியா’ தலைவா்களைச் சந்தித்து, அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்து விவாதிக்க சிவசேனை (யுபிடி) தலைவா் தாக்கரே தேசிய தலைநகா் தில்லியில் உள்ளாா்.