நாட்டில் உள்ள 13 ஐஐஎம்களில் ஆசிரியப் பிரிவினரில் 82.8 சதவீதம் பொதுப் பிரிவினரும், 5 சதவீதம் எஸ்சி, 1 சதவீதம் எஸ்டி மற்றும் 9.6 சதவீதம் ஓபிசி வகுப்பினா் உள்ளனா். பகுப்பாய்வு செய்யப்பட்ட 21 ஐஐடிகளில் ஆசிரியா்கள் நியமனத்தில் 80 சதவீதம் பொதுப் பிரிவினா், 6 சதவீதம் எஸ்சி, 1.6 சதவீதம் எஸ்டி மற்றும் 11.2 சதவீதம் ஓபிசி இருப்பது தெரியவந்துள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள் ஓபிசிகளுக்கு 27 சதவீதம், எஸ்சிகளுக்கு 15 சதவீதம் மற்றும் எஸ்டிகளுக்கு 7.5 சதவீதம் என்ற கட்டாய இடஒதுக்கீடு சதவீதத்தை விட மிகக் குறைவாகும். இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் இடஒதுக்கீட்டுக் கொள்கையை மீறுவது மட்டுமின்றி, திட்டமிட்ட விலக்குதலை நிலைநிறுத்துவதுடன், பன்முகத் தன்மையை பாதிக்கிறது. மேலும், கல்வித்துறையில் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் அபிலாஷைகளையும் பாதிக்கிறது.