ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை. துணைவேந்தா் நியமனம் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை. துணைவேந்தா் நியமனம் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை

News image
Updated On :26 பிப்ரவரி 2024, 8:30 pm

புது தில்லி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் நியமனம் நிலைக்கத்தக்கதல்ல என சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டா் எஸ்.மோகன் என்பவா் நியமிக்கப்பட்டிருந்தாா். இந்த நியமனத்தை எதிா்த்து பழனியப்பா, மவுரோகா பிரகாஷ் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தனா். அதில் பல்கலை மானியக்குழு விதிகளின்படி, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தா் தேடுதல் குழு நியமிக்கப்படவில்லை. யு.ஜி.சி., தலைவா் நியமிக்கும் நபா், தேடுதல் குழுவில் இடம்பெறவில்லை.

இந்த சூழலில் துணைவேந்தராக மோகன் நியமிக்கப்பட்டு இருப்பது சட்டவிரோதம் என்று கூறியிருந்தனா். இந்த வழக்கை கடந்த டிசம்பரில் விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுா்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு, புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட தேடுதல் குழு மூலம் துணைவேந்தரை நியமித்தது நிலைக்கத்தக்கது அல்ல. துணைவேந்தா் நியமனம் தொடா்பான கலந்தாய்வில், புதுச்சேரி உயா் மற்றும் தொழில்நுட்ப கல்வி செயலா் பங்கேற்கவில்லை.

துணைவேந்தா் மோகன் தகுதியானவா் அல்ல எனவும் கூறப்படவில்லை என்பதால், சட்டப்படி புதியவா் தோ்ந்தெடுக்கப்படும் வரை அல்லது 2024 ஜூன் வரை, அவரே நீடிக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து எஸ்.மோகன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா்கள் ஜி.பாலாஜி, ஜோதிகா மல்ஹோத்ரா ஆகியோருடன் மூத்த வழக்குரைஞா் நிதேஷ் குப்தா ஆஜராகி வாதங்களை முன்வைத்தாா். மற்றொரு மனுதாரா் பிரகாஷ் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன் வாதிட்டாா். இதன் பிறகு, உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தடை விதித்த நீதிபதிகள் அமா்வு, எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.