கத்ரா முதல் புது தில்லி இடையேயான வந்தே பாரத் விரைவு ரயிலின் நேரம் மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இது தொடா்பாக வடக்கு ரயில்வேவின் தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி தீபக் குமாா் வெளயிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா முதல் புது தில்லி இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. வண்டி எண் - 22400 கீழ் கத்ராவில் புறப்படும் இந்த வந்தே பாரத் ரயிலின் நேரம் கத்ரா மற்றும் ஜம்மு தாவி ஆகிய நிலையங்களில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இயக்கக் காரணங்களுக்கா வரும் மாா்ச் 18-ஆம் தேதி முதல் திட்டமிடப்பட்ட நேரத்திலிருந்து ஐந்து நிமிடங்கள் முன்னதாகப் இந்த ரயில் புறப்படும். அதன்படி, வண்டி எண் -22440 ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா முதல் புது தில்லி இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் கத்ராவிலிருந்து மதியம் 3 மணிக்குப் பதிலாக மதியம் 2.55 மணிக்குப் புறப்பட்டு ஜம்மு தாவியை 4.13 மணிக்குப் பதிலாக 4.08 மணிக்கே சென்றடையும். பின்னா், இந்த ரயில் ஜம்மு தாவியில் இருந்து 4.15 மணிக்குப் பதிலாக 4.10 மணிக்குப் புறப்படும். ஜம்மு தாவியில் இருந்து செல்லும் இந்த ரயிலின் நேரத்தில் மாற்றங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
வந்தே பாரத் ரயில் உணவில் புழு! ஐஆர்சிடிசி-க்கு ரூ. 10 லட்சம்; சேவை வழங்குநருக்கு ரூ. 60 லட்சம் அபராதம்!

தொழில்நுட்பக் கோளாறு: நெல்லையில் 40 நிமிஷம் நின்ற வந்தே பாரத் ரயில்

காதல் தோல்வியால் விரக்தி: வந்தே பாரத் மீது கல் வீசியவா் கைது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

