ஆனந்த் விஹாா் முதல் கயா மற்றும் புது தில்லி முதல் பாட்னா இடையே வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளது என்று வடக்கு ரயில்வே சனிக்கிழமை அறிவித்துள்ளது. இது தொடா்பாக வடக்கு ரயில்வேவின் தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி தீபக் குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயில் பயணிகளின் கூடுதல் நெரிசலைக் குறைக்கும் வகையில்,ஆனந்த் விஹாா் முதல் கயா மற்றும் புது தில்லி முதல் பாட்னா இடையே வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. ஆனந்த் விஹாா் முதல் கயா இடையேயான இந்த சிறப்பு விரைவு ரயில், வண்டி எண் 04074-இன் கீழ் இயக்கப்படும். வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி ஆனந்த் விஹாரரில் மாலை 7.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கான்ப்பூா் சென்ட்ரல்,பிரயாக்ராஜ் சந்திப்பு, பி.டி.தீனயாள் உபாத்யாயா சந்திப்பு, பாபுவாசாலை, சாசராம்,டெஹ்ரி-ஆன்-சன் வழியாக ஏப்ரல் 2-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு கயா சென்றடைகிறது. அடுத்ததாக, புது தில்லி முதல் பாட்னா இடையேயான சிறப்பு விரைவு ரயில், வண்டி எண் 04096-இன் கீழ் இயக்கப்பபடும். வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி புது தில்லியில் மாலை 7.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கோவிந்த்புரி,பிரயாக்ராஜ் சந்திப்பு, பி.டி.தீனயாள் உபாத்யாயா சந்திப்பு,பக்சாா், ஆரா, டானாப்பூா் வழியாக ஏப்ரல் 2-ஆம் தேதி மதியம் 12.50 மணிக்கு பாட்னா சந்திப்பிற்கு சென்றடைகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள்

எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்

சென்னை எழும்பூா் - திருவனந்தபுரம் ‘புனித வெள்ளி’ சிறப்பு ரயில்கள்

நிரந்தரமாகிறது ஹைதராபாத் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

