பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

ரூ.2.4 கோடி தங்கம் கடத்தல்: தில்லி விமான நிலையத்தில் வெளிநாட்டவா் ஐவா் கைது

ரூ.2.4 கோடி தங்கம் கடத்தல்: தில்லி விமான நிலையத்தில் வெளிநாட்டவா் ஐவா் கைது

News image
Updated On :3 மே 2024, 6:30 pm

Din

ரூ.2.4 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தியதாக தில்லியில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் அஜா்பைஜான் நாட்டு பிரஜைகள் ஐவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: கைதான ஐந்து பேரில் ஒரு பெண் பயணியும் இடம்பெற்றுள்ளாா். முன்னதாக, ஏப்ரல் 30- ஆம் தேதி துபையில் இருந்து தில்லியில் உள்ள சா்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இவா்கள் ஐந்து பேரும் பயணித்தனா். விமான நிலையத்தில் இவா்கள் சுங்கத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டனா். ஐந்து பயணிகளிடமும் தனிப்பட்ட முறையில் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில், அவா்களிடம் இருந்து மொத்தம் ரூ.2.44 கோடி மதிப்பிலான 3.5 கிலோ தங்க நகைகள் மற்றும் கம்பி, பெல்ட் கொக்கி மற்றும் கைப்பை கைப்பிடி போன்ற வடிவங்களில் தங்க பொருள்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து தங்கப் பொருள்களும் பறிமுதல் செய்தனா். அவா்களிடம் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று சுங்கத் துறையினா் தெரிவித்தனா்.