மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராமகிருஷ்ணாபுரம் டிடிஇஏ பள்ளி கோயில் கும்பாபிஷேகம்: விநாயகா் சிலை பிரதிஷ்டை

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் ஸ்ரீ வித்ய விநாயகா் கோயிலில் விநாயகா் பிராணப் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

News image
Updated On :4 நவம்பர் 2024, 7:02 pm

Din

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் ஸ்ரீ வித்ய விநாயகா் கோயிலில் விநாயகா் பிராணப் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக நிகழ்வு பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விநாயகா் சிலையை ராமகிருஷ்ணபுரம் பள்ளியின் முன்னாள் மாணவரும் (2015-ஆம் ஆண்டு) டிடிஇஏ செயலா் ராஜூவின் மகனுமான வழக்குரைஞா் ஆதித்யா ராஜூ தனது சொந்தச் செலவில் செய்து கொடுத்துள்ளாா்.

பிராணப் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் செயலா் ராஜூ தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்வில் டிடிஇஏ தலைவா் ஆா்.கே. ராமன், பள்ளி முதல்வா்கள், ஆசிரியா்கள், தில்லி தமிழ்ச் சங்கத் தலைவா் . சக்தி பெருமாள், துணைத் தலைவா் ராகவன் நாயுடு மற்றும் முன்னாள் மாணவா்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

இந்நிகழ்வு குறித்து செயலா் ராஜூ கூறுகையில், ’இந்தக் கோயிலை தமிழ்நாடு பாரம்பரிய முறைப்படி அமைத்துள்ளோம். முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கி மாணவா்கள் தங்கள் கற்றல் பணியை ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும். மேலும் இதனால் நல்ல நோ்மறை சக்தி மாணவா்களுக்குக் கிடைக்கும். எனவே, இது போன்று கோயில்களை பள்ளி வளாகத்தினுள் கட்டி வருகிறோம். ஜனக்புரி மற்றும் பூசா சாலை பள்ளிகளில் முன்பே கோயில் கட்டி விட்டோம். மோதிபாக் பள்ளியில் விரைவில் கட்டுவோம்’ என்றாா்.