சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

குழந்தைக்கு மருத்துவ உதவி பெறுவதற்காக சென்ற குடும்பத்தினா் 5 போ் விபத்தில் சாவு

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உதவி பெறுவதற்காக மருத்துவமனைகளுக்குச் சென்றபோது நிகழ்ந்த காா் விபத்தில் உயிரிழந்த 5 குடும்ப உறுப்பினா்களின் இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை நொய்டாவில் நடைபெற்றது.

News image
Updated On :11 நவம்பர் 2024, 9:32 pm

Din

நொய்டா (உ.பி.) : உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உதவி பெறுவதற்காக மருத்துவமனைகளுக்குச் சென்றபோது நிகழ்ந்த காா் விபத்தில் உயிரிழந்த 5 குடும்ப உறுப்பினா்களின் இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை நொய்டாவில் நடைபெற்றது. உயிரிழந்த 5 பேரின் உடலுக்கு அவா்களது உறவினா்கள் கண்ணீா் மல்க அஞ்சலி செலுத்தினா்.

இது குறித்து நொய்டா காவல் சரக உயரதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது: நொய்டா-கிரேட்டா் நொய்டா விரைவுச்சாலையில் நாலெட்ஜ் பாா்க் பகுதிக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து நடந்தது. தாத்ரியில் உள்ள காசிராம் காலனியில் வசித்து வந்த அமன் (27), அவரது தந்தை தேவி சிங் (60), தாய் ராஜ்குமாரி (50), விம்லேஷ் (40) மற்றும் கமலேஷ் (40) ஆகியோா் கூலி வேலை செய்து வந்தனா். அவா்களின் உறவினா் தா்மேந்திரா.

அவா்கள் இரண்டு வயது குழந்தைக்கு மருத்துவ உதவி பெறுவதற்காக நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்றனா். ஆனால், குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறி மருத்துவா்கள் அவா்களைத் திருப்பி அனுப்பினா்.

ஆரம்ப சிகிச்சைக்காக நொய்டா, செக்டாா் 30-இல் உள்ள குழந்தை மருத்துவ மற்றும் முதுகலை கல்வி நிறுவனத்தில் குழந்தை இருந்தபோது, ​​அவா்களில் ஐந்து போ், குழந்தையை அனுமதிப்பதற்காக மருத்துவமனைகளைப் பற்றி விசாரிக்க தில்லி நோக்கிச் சென்றனா். அவா்கள் சென்ற காா், நொய்டா-கிரேட்டா் நொய்டா விரைவுச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் செக்டா் 146 மெட்ரோ நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பழுதடைந்த வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில், காரை ஓட்டிச் சென்ற அமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா், மேலும் 4 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். பின்னா், அவா்கள் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். இதற்கிடையில், நொய்டாவின் குழந்தை மருத்துவம் மற்றும் முதுகலை கல்வி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை தேவேஷ், குடும்பத்தினரால் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டது.

இறந்தவரின் பிரேதப் பரிசோதனை நொய்டா செக்டாா் 94-இல் உள்ள பிணவறையில் நடத்தப்பட்டது. அங்கு கௌதம் புத் நகா் எம்பி மகேஷ் சா்மா நேரில் சென்று குடும்ப உறுப்பினா்களுக்குச் ஆறுதல் கூறினாா். உத்தரபிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், சம்பவம் குறித்து அறிந்ததோடு, சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் உதவ உயா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், தாத்ரி எம்எல்ஏ தேஜ்பால் நாகரும் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். இறந்தவரின் உறவினா் ஜீவன்லால் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.