தில்லி காவல் துறையினா் மேற்கொண்ட 24 மணி நேர ’ஆபரேஷன் கவாச்’ நடவடிக்கையில், நகரம் முழுவதும் சட்டவிரோத துப்பாக்கிகள், திருட்டுகள், தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்ததாகக் கூறப்படும் 1,224 பேரை கைது செய்துள்ளனா் என்று அதிகாரி ஒருவா் வியாழனன்று தெரிவித்தாா்.
குற்றப்பிரிவு, சிறப்புப் பிரிவு மற்றும் 15 மாவட்டங்களின் காவல்துறை உள்ளிட்ட தில்லி காவல்துறையின் அனைத்துப் பிரிவுகளும் நவ.12 முதல் 13-ஆம் தேதி வரை 24 மணி நேர ஆபரேஷன் கவாச் நடவடிக்கையைத் தொடங்கின.
அனைத்துப் பிரிவுகளும் 874 இடங்களில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் கீழ் 1,224 பேரை கைது செய்துள்ளோம். ’ஆபரேஷன் கவாச்’ என்பது தில்லி காவல்துறை அவ்வப்போது தங்கள் பகுதிகளில் உள்ள குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரா்கள் மீது நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். இது சிறப்புப் பிரிவு மற்றும் குற்றப் பிரிவுடன் ஒருங்கிணைந்து உள்ளூா் காவல்துறையால் செய்யப்படுகிறது.
தொடர்புடையது

காணாமல்போன 194 பேரை மீட்டு குடும்பத்தினருடன் சோ்த்துவைப்பு தில்லி காவல்துறை நடவடிக்கை

போக்குவரத்து விதிமீறல்கள்: 3 மணி நேர நடவடிக்கையில் 11,800 போ் மீது அபராதம் விதிப்பு!

ஆா்வலா்கள் மீது சுமத்தப்பட்ட சட்டவிரோத தடுப்புக்காவல்: தில்லி காவல் துறையை கண்டித்த உயா்நீதிமன்றம்

தில்லியில் சட்டவிரோத ஆயுதக் கும்பல் முறியடிப்பு: கல்லூரி மாணவா் கைது
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

