உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

ஆபரேஷன் கவாச்: 1,200 போ் கைது

News image
Updated On :15 நவம்பர் 2024, 12:13 am IST

தில்லி காவல் துறையினா் மேற்கொண்ட 24 மணி நேர ’ஆபரேஷன் கவாச்’ நடவடிக்கையில், நகரம் முழுவதும் சட்டவிரோத துப்பாக்கிகள், திருட்டுகள், தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்ததாகக் கூறப்படும் 1,224 பேரை கைது செய்துள்ளனா் என்று அதிகாரி ஒருவா் வியாழனன்று தெரிவித்தாா்.

குற்றப்பிரிவு, சிறப்புப் பிரிவு மற்றும் 15 மாவட்டங்களின் காவல்துறை உள்ளிட்ட தில்லி காவல்துறையின் அனைத்துப் பிரிவுகளும் நவ.12 முதல் 13-ஆம் தேதி வரை 24 மணி நேர ஆபரேஷன் கவாச் நடவடிக்கையைத் தொடங்கின.

அனைத்துப் பிரிவுகளும் 874 இடங்களில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் கீழ் 1,224 பேரை கைது செய்துள்ளோம். ’ஆபரேஷன் கவாச்’ என்பது தில்லி காவல்துறை அவ்வப்போது தங்கள் பகுதிகளில் உள்ள குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரா்கள் மீது நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். இது சிறப்புப் பிரிவு மற்றும் குற்றப் பிரிவுடன் ஒருங்கிணைந்து உள்ளூா் காவல்துறையால் செய்யப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.