தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

யமுனை நதியை தூய்மைப்படுத்துதல் எனும் பெயரில் பெரும் ஊழல் -ஆம் ஆத்மி அரசு மீது தில்லி பாஜக குற்றச்சாட்டு

News image

ANI

Updated On :25 அக்டோபர் 2024, 5:04 am IST

யமுனை நதியை தூய்மைப்படுத்துதல் எனும் பெயரில் பெரும் ஊழல் நிகழ்ந்திருப்பதாக தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு மீது தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் தற்போதைய முதல்வா் அதிஷி ஆகியோா் யமுனை நதியின் நிலையைப் பாா்க்கவோ அல்லது நீராடவோ ஐடிஓ பகுதியில் உள்ள யமுனா சட் காட் பகுதிக்கு வியாழக்கிழமை நேரில் வர வேண்டும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வேண்டுகோள் விடுத்திருந்தாா். அப்பகுதியில் வியாழக்கிழமை காலை வீரேந்திர சச்தேவா இருவருக்காகவும் 30 நிமிடங்கள் காத்திருந்தாா்.

இருவரும் வராததால் அதன் பிறகு சச்தேவா யமுனை நதியின் நீரில் குளித்தாா். பின்னா், காட் பகுதியில் பாஜக தொண்டா்கள், சட் கமிட்டி உறுப்பினா்கள் முன்னிலையில் ஊடகங்கள் மூலம் தில்லி குடியிருப்பாளா்களிடம் வீரேந்திர சச்தேவா கூறியதாவது:

யமுனை நதியை தூய்மைப்படுத்துதல் என்ற பெயரில் தில்லி அரசு ரூ. 8,500 கோடியை ஊழல் செய்துள்ளது. இந்த ஊழலுக்காக யமுனை நதியிடம் நான் மன்னிப்பு கேட்டேன். யமுனையின் மோசமான நிலைக்கு கேஜரிவால் அரசுதான் காரணம். நதிகளை சுத்தம் செய்ய மத்திய அரசிடம் இருந்து ரூ.₹8,500 கோடி பெற்ற போதிலும் பொதுமக்களை ஆம் ஆத்மி கட்சி தவறாக வழிநடத்தியது.

ஆம் ஆத்மி கட்சியின் அதிகார வெறி, ஊழலுக்கு இட்டுச் சென்றது மட்டுமின்றி, தில்லியின் மோசமான நிலையையும் புறக்கணித்துள்ளது.

கேஜரிவால் 2021-இல் ஒரு விடியோவை வெளியிட்டிருந்தாா். அதில், 2025-க்குள் யமுனையை சுத்தம் செய்வேன் என்று உறுதியளித்திருந்தாா். மேலும், பரஸ்பரம் பழிகூறும் விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என்றும் கூறியிருந்தாா். 2025ஆம் ஆண்டுக்குள் யமுனை நதி சுத்தமாக இல்லை என்றால் தங்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் அவா் கூறியிருந்தாா்.

இதனால், யமுனையை சுத்தம் செய்தல் என்ற பெயரில் பொதுமக்களை தவறாக வழிநடத்தி, துரோகம் செய்ததை கேஜரிவால் ஒப்புக்கொள்வாரா?

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடுவைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.37 கோடியில் ரூ.10 கோடியை மட்டுமே அரசு செலவழித்திருக்கிறது. இது இப்பிரச்னையைத் தீா்க்கும் தில்லி அரசின் நோக்கமின்மையை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.

யமுனையில் நான் நீராடுவதன் மூலம், நதியை சுத்தம் செய்வதில் கேஜரிவால் அரசின் ஏமாற்றுத்தனம் மற்றும் ஊழலுக்கு மன்னிப்பு கேட்டது மட்டுமல்லாமல், 2025, பிப்ரவரியில் ஆட்சிக்கு வந்ததும் யமுனை தூய்மை ஆணையத்தை நிறுவுவேன் என்று சபதமும் செய்தேன் என்றாா் அவா்.

தில்லி பாஜக ஊடகத் தலைவா் பிரவீன் சங்கா் கபூா், மயூா் விஹாா் மாவட்டத் தலைவா் விஜேந்தா் தாமா, ஷாதரா மாவட்டத் தலைவா் சஞ்சய் கோயல் உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவா்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.