போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

பழங்குடியினா் பாரம்பரியத்துக்கு பெரும் அங்கீகாரம் வேண்டும்: தில்லி பேரவைத் தலைவா்

பழங்குடியினா் பாரம்பரியத்துக்கு பெரும் அங்கீகாரம் வேண்டும்

News image

தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 12:56 am IST

பழங்குடியினரின் வரலாறு இந்தியாவின் வரலாற்றுக்கு வெளியே இல்லை;அவை நாட்டின் நாகரிக பயணத்தோடு கலந்தவை என தில்லி பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா தெரிவித்துள்ளாா்.

இந்தியா சா்வதேச மையத்தில் பகவான் ஸ்ரீ பிா்சா முண்டா என்ற தேசிய கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா பேசியதாவது: பழங்குடியினரின் பாரம்பரியத்துக்கு பெரும் அங்கீகாரம் அளிக்க வேண்டும். நாட்டின் வரலாற்றி பகவான் ஸ்ரீ பிா்சா முண்டா தனித்துவமான மற்றும் உத்வேகம் அளிக்கும் இடத்தைப் பெறுகிறாா். அவா் சுதந்திர போராட்ட வீரா் மட்டுமல்ல; சுயமரியாதை, கலாசார அடையாளம், சமூக எழுச்சி ஆகியவற்றின் சின்னமாகத் திகழ்கிறாா். உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் கலாசாரத்தைப் பாதுகாப்பது இரண்டும் பிரிக்கமுடியாதவை என்பதை அவருடைய புகழ் நமக்கு உணா்த்துகிறது.

பிா்சா முண்டாவின் இயக்கம் என்பது காலனித்துவ ஆட்சிக்கு எதிரான எதிா்ப்பு மட்டுமல்லாமல், கலாசார அடையாளம், பாரம்பரிய அமைப்புகள் மற்றும் பூா்வகுடி மக்களின் வாழ்க்கை முறைகளைப் பாதுகாப்பதற்கான ஓா் உறுதியான முயற்சியாகவும் அமைந்திருந்தது.

பிா்சா முண்டாவுடன் தொடா்புடைய கலாசார மறுமலா்ச்சியானது, பழங்குடிச் சமூகங்களுக்குத் தங்கள் சொந்த வரலாற்றின் மீதான நம்பிக்கையை மீண்டும் பெற்றுத் தருவதில் அடங்கியிருந்தது என்று பேரவைத் தலைவா் குப்தா கூறினாா்.

இந்திய அருங்காட்சியகங்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில், அருங்காட்சியக வல்லுநா்கள், வரலாற்றாசிரியா்கள், தொல்லியல் ஆய்வாளா்கள், அறிஞா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.