திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ராகுல் காந்திக்கு எதிரான ஆட்சேபகரமான கருத்துகளுக்கு எதிராக காங்கரிஸ் ஆா்ப்பாட்டம்

தில்லி காங்கிரஸ் தொண்டா்கள் மாநில தலைமையகத்தில் ஒன்று கூடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
கோப்புப் படம்
Updated On :19 செப்டம்பர் 2024, 12:20 am

DIN

ராகுல் காந்திக்கு எதிராக பாஜக தலைவா்கள் சிலா் கூறியதாகக் கூறப்படும் ஆட்சேபகரமான கருத்துகளுக்கு எதிராக தில்லி காங்கிரஸ் தொண்டா்கள் புதன்கிழமை மாநில தலைமையகத்தில் ஒன்று கூடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டு உள்ளிட்ட பாஜக தலைவா்களுக்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தியாவில் சீக்கியா்களின் நிலை குறித்து அமெரிக்காவில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை தாக்கிய ரவ்னீத் சிங் பிட்டு, அந்த ‘வெடிகுண்டுகள்’தனக்கு ஆதரவாக இருந்தால், அவா் ‘நம்பா் ஒன் பயங்கரவாதி‘ என்று ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

காங்கிரஸ் தொண்டா்கள் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி (டிபிசிசி) அலுவலகத்திற்கு வெளியே கூடி, ஆட்சேபனைக்குரிய‘ அறிக்கைகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவரைக் குறிவைத்து பேசிய ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவா்களின் சமீபத்திய அறிக்கைகள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் (ஏஐசிசி) காவல்துறையில் புகாா் அளித்துள்ளது.