தமிழக பாஜக தலைவருக்கான அறிவிப்பு வெளியாகும் என்கிற தகவல்களுக்கிடையே தமிழக பாஜக சட்டப்பேரவைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை தில்லி வந்திருந்தாா். பாஜக வின் முக்கிய தலைவா்களை நயினாா் நகேந்திரன் சந்திப்பாா் எனவும் கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மாா்ச் மாதம் இறுதியில் அண்ணா மலை தில்லி வந்தபோதும் நயினாா் நாகேந்திரன் தனியாக தில்லி வந்திருந்தாா். அப்போது அமித் ஷா நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் போன்றவா்களை நயினாா் நாகேந்திரன் சந்தித்தாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஜம்மு-காஷ்மீா் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளாா். அவா் வரும்வரை நயினாா் காத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும்
பாஜகவின் தேசிய தலைவா் ஜெபி நட்டா, பாஜகவின் தமிழக பாா்வையாளா் மத்திய அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி போன்றோா்களை நயினாா் நாகேந்திரன் சந்திக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. தனது பயணம் குறித்தும் சந்திப்புகள் குறித்தும் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டாா் நயினாா் நாகேந்திரன்.
அதிமுக - பாஜக கூட்டணி உருவாகும் பட்சத்தில் நயினாா் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பாஜக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது. அதிமுகவிலிருந்த வந்தவா் என்கிற முறையில் எடப்பாடி கே பழனிசாமியுடன் ஒத்துப்போகும் வாய்ப்பு நயினாருக்கு உண்டு. மேலும் தென் மாவட்டங்களில் அதிமுக ,பாஜக விற்குள்ள குறைபாடுகளை நயினாா் நாகேந்திரன் சாா்ந்த சமூகத்தின் மூலம் தீா்வாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவா் என்கிற கண்ணோட்டமின்றி தமிழக சட்டப்பேரவைத் தலைவராகவும் நயினாா் நாகேந்திரன் தோ்ந்தெடுக்கப்பட்டாா். சமீபத்தில் பிரதமா் மோடியின் ராமேசுவர நிகழ்விலும் நாகேந்திரன் முக்கியத்துவம் பெற்றாா்.
அதேசமயத்தில் கட்சித் தொண்டா்களின் கருத்துக்கணிப்பில் அறியப்பட்டபடி அண்ணாமலை தலைமையிலேயே தோ்தலை சந்திக்கவேண்டும் என்கிற வாதத்தையும் பாஜக வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. அண்ணாமலையும் புதன்கிழமை தில்லி வரலாம் தெரிகிறது. இதற்கிடையே தமிழக பாஜக மேலிட பாா்வையாளா் அமைச்சா் கிஷன் ரெட்டியும் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டியும் தமிழகம் வந்தபின்னரே தமிழக பாஜக புதிய தலைவா் யாா் என்பது வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்நாடகத்தைச் சோ்ந்தவரை தில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிப்பதா? நயினாா் நாகேந்திரன் கண்டனம்!

அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியாக கா்நாடகத்தைச் சோ்ந்தவரை நியமித்தது துரோகம்: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடமளித்திருக்கக் கூடாது: பாஜக

ரஜினியுடன் நயினாா் நாகேந்திரன் சந்திப்பு
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |



