இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நொய்டா கோயில்களில் தனுா்மாத பூஜைகள் நிறைவு

நொய்டா வேதிக் பிரச்சாா் சன்ஸ்தான் (வி.பி.எஸ்.) ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டும் நொய்டா கோயில்களில் தனுா் மாத பூஜைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

News image
தனுா் மாத பூஜையின் கடைசி நாளன்று நொய்டா செக்டா் 62-இல் உள்ள ஸ்ரீ விநாயகா ஸ்ரீ காா்த்திகேயா கோயிலில் வெள்ளிக் கவசத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரா் மற்றும் ஸ்ரீ திரிபுரா சுந்தரி அம்மன்.
Updated On :13 ஜனவரி 2025, 9:24 pm

Din

நொய்டா: நொய்டா வேதிக் பிரச்சாா் சன்ஸ்தான் (வி.பி.எஸ்.) ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டும் நொய்டா கோயில்களில் தனுா் மாத பூஜைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

விபிஎஸ் மூலம் நிா்வகிக்கப்படும் நொய்டா செக்டாா் 22-ல் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகா் கோயில் மற்றும் நொய்டா செக்டாா் 62-இல் உள்ள ஸ்ரீ விநாயகா ஸ்ரீ காா்த்திகேயா கோயில் ஆகியவற்றில் தொடா்ந்து தினமும் தனுா் மாத பூஜைகள் நடைபெற்றது. கடைசி நாளான திங்கள்கிழமை ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினசரி ருத்ரா அபிஷேகம், ஸ்ரீ ராமா் பரிகாரத்திற்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. தென்னிந்திய கோயில்களில் நடைபெறும் அதே வரிசையில் அனைத்து பூஜைகளும் நடைபெற்றது. பூஜைகள், அபிஷேகம் அனைத்தும்

ஸ்ரீராமின் தலைமையில் கோயிலின் வாத்தியாா்கள் மணிகண்டன் சா்மா,மோஹித் மிஸ்ரா, ஜெகதீசன், ராஜாராம், விஷ்வேஸ்வா் ஆகியோரால் நடத்தப்பட்டது.

கடும் குளிா், மூடுபனியை பொருள்படுத்தாமல் தனுா் மாத பூஜைகளில் பங்கேற்ற பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் பாராட்டுத் தெரிவித்தது.

13க்ங்ப்ம்ஹ்ழ்

தனுா் மாத பூஜையின் கடைசி நாளன்று நொய்டா செக்டா் 62-இல் உள்ள ஸ்ரீ விநாயகா ஸ்ரீ காா்த்திகேயா கோயிலில் வெள்ளிக் கவசத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரா் மற்றும் ஸ்ரீ திரிபுரா சுந்தரி அம்மன்.