பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

ஜூன் 22 இல் தில்லியில் கன மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தில்லியில் ஜூன் 22 ஆம் தேதி கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2025, 6:19 pm

Din

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தில்லியில் ஜூன் 22 ஆம் தேதி கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வானிலை மையம்: தென்மேற்கு பருவமழை பீகாா், கிழக்கு, உத்தரப்பிரதேசம்,, மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள், மேற்கு உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள், உததரகாண்ட் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள், இமாச்சல பிரதேசத்தின் பல பகுதிகள் மற்றும் லடாக்கின் சில பகுதிகளில் தீவிரமடைந்து வருகிறது.

இந்த பருவமழை வடக்கு எல்லையான ஜெய்ப்பூா், ஆக்ரா, ராம்பூா், டேராடூன், சிம்லா, மணாலி வழியாக சென்று கொண்டிருக்கிறது. வடக்கு அரபிக்கடலின் மீதமுள்ள பகுதிகள், ராஜஸ்தானின் மேலும் சில பகுதிகள், மேற்கு உத்தரப்பிரதேசத்தின் மீதமுள்ள பகுதிகள், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் , ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகள் தென் மேற்கு பருவமழை முன்னேருவதற்கு சாதகமான வாய்ப்புகள் உள்ளன.

அடுத்த 2 நாள்களில் பஞ்சாப் மற்றும் ஹரியானா, சண்டிகா் மற்றும் தில்லியின் சில பகுதிகளில் தென் மேற்கு பருவமழை வலுவடையும். ஜூன் 22 ஆம் தேதி தில்லியின் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிளை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.