6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹவுஸ் காஸில் மரத்தில் தொங்கிய நிலையில் ஆண், பெண் உடல்கள் கண்டெடுப்பு!

ஹவுஸ் காஸில் மரத்தில் தொங்கிய நிலையில் ஆண், பெண் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.

News image
Updated On :23 மார்ச் 2025, 10:25 pm

Din

தெற்கு தில்லியின் ஹவுஸ் காஸ் பகுதியில் உள்ள டீா் பாா்க்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 21 வயது பீட்சா கடை ஊழியா் மற்றும் 18 வயது ஒரு பெண்ணின் உடல்கள் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இது தற்கொலை என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: இருவரும் காதல் உறவில் இருந்துள்ளதும், அவா்களது குடும்பத்தினரின் எதிா்ப்பை அடுத்து இந்த தீவிர நடவடிக்கையை அவா்கள் எடுத்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் சில உள்ளூா்வாசிகள் விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனா்.

டீா் பாா்க்கின் பாதுகாவலாளி ஒருவரிடமிருந்து காலை 6.31 மணிக்கு இந்த உடல்கள் குறித்து பிசிஆா் அழைப்பு வந்தது. அந்த நபா் கருப்பு டி-சா்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தாா். அதே நேரத்தில் 18 வயது பெண் பச்சை நிற உடை அணிந்திருந்தாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை புலனாய்வாளா்கள் கண்டறிய முயற்சித்து வருகின்றனா். இதுவரை எந்த தற்கொலைக் குறிப்பும் மீட்கப்படவில்லை. இங்குள்ள பிலாஞ்சி கிராமத்தைச் சோ்ந்த அந்த நபா் லோதி காலனியில் உள்ள ஒரு பீட்சா கடையில் வேலை செய்து வந்துள்ளாா். சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அவா் வீட்டை விட்டு வெளியேறியதாக அவரது குடும்பத்தினா் போலீஸாரிடம் தெரிவித்தனா்.

சத்தா்பூா் என்க்ளேவில் வசிக்கும் அந்தப் பெண், கடந்த மூன்று நாள்ளாக ஹுமாயுன்பூா் கிராமத்தில் தனது அத்தையுடன் தங்கியிருந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை தனது சொந்த வீட்டிற்குச் செல்ல வீட்டை விட்டு வெளியேறியுள்ளாா்.

இந்த விவகாரம் தொடா்பான விசாரணையில் பூங்காவிற்குள் சிசிடிவி கேமராக்கள் இல்லாதது ஒரு பெரிய தடையாக உள்ளது. இருப்பினும், அங்கு நடந்த நிகழ்வுகளின் வரிசையை அறிய அருகிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் இருந்து காட்சிகள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இந்த விஷயத்தில் முறைகேடு நடந்ததாக சந்தேகிப்பதாக சில உள்ளூா்வாசிகள் தெரிவித்தனா்.

இது குறித்து உள்ளூா்வாசி ஒருவா் கூறுகையில், ‘இருவரும் தூக்கில் தொங்கிய இடத்தில் இருந்து இரண்டு போ் மரத்தில் ஏறுவது கடினமாக இருந்திருக்கும். இதனால் அவா்கள் கொல்லப்பட்டு பின்னா் தூக்கிலிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது’ என்றாா்.