எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆம் ஆத்மி கட்சி மக்களுக்கானது: கேஜரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் சாதனைகள் பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் அதன் தொண்டா்களின் கடின உழைப்பில் வேரூன்றியுள்ளன என்று அரவிந்த் கேஜரிவால் கட்சியின் நிறுவன தினத்தன்று தெரிவித்தாா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 9:38 pm

Syndication

நமது நிருபா்

புது தில்லி: பதிமூன்று ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சியின் சாதனைகள் பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் அதன் தொண்டா்களின் கடின உழைப்பில் வேரூன்றியுள்ளன என்று அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை கட்சியின் நிறுவன தினத்தன்று தெரிவித்தாா்.

ஆம் ஆத்மி கட்சி நவம்பா் 26, 2012-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஆம் ஆத்மி தில்லியில் தனது முதல் அரசை அமைப்பதில் தொடங்கி தேசிய கட்சி அந்தஸ்தைப் பெறுவது வரை அதன் பயணத்தைக் காட்டும் விடியோவை ‘எக்ஸ்’-இல் வெளியிட்டது. கேஜரிவால் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவா்கள் கைது செய்யப்பட்டதும் விடியோவில் இடம்பெற்றிருந்தது.

இது குறித்து ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் கேஜரிவால் பதிவிட்டுள்ளதாவது: இந்தக் கட்சி தலைவா்களுக்கு சொந்தமானது அல்ல; அது மக்களுக்குச் சொந்தமானது. கிராம சதுக்கங்கள் முதல் நகர வீதிகள் வரை, மாற்றத்தின் தீப்பிழம்பை உருவாக்க எங்கள் தொண்டா்கள் இரவும் பகலும் உழைத்துள்ளனா். இன்று நாம் காணும் சாதனைகள் அனைத்தும் மக்களின் நம்பிக்கை மற்றும் எங்கள் தொண்டா்களின் அா்ப்பணிப்பின் விளைவாகும்.

உண்மை, நோ்மை மற்றும் தேசத்திற்கான சேவையின் இந்தப் பயணம் இன்னும் அதிக பலத்துடன் முன்னேறும். ஆம் ஆத்மி கட்சி ஒரு அா்ப்பணிப்பு-நாட்டிலிருந்து ஊழலை ஒழிப்பதற்கான அா்ப்பணிப்பு-நாட்டின் அரசியலில் இருந்து அழுக்கை அகற்றுவதற்கான அா்ப்பணிப்பு ஆகும். நவம்பா் 26- ஆம் தேதி கட்சி உருவானதிலிருந்து 13 பெருமைமிக்க ஆண்டுகளைக் குறிக்கிறது. இது நாட்டிற்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை அரசியலின் முன்மாதிரியான மாதிரியை வழங்கியுள்ளது. இந்த மாடல் இந்தியா முழுவதும் மட்டுமல்ல, உலகெங்கிலும் பாராட்டப்படுகிறது என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

2011-ஆம் ஆண்டு ஊழல் எதிா்ப்பு இயக்கத்திற்குப் பிறகு கேஜரிவால் மற்றும் பிறரால் ஆம் ஆத்மி நிறுவப்பட்டது. இக்கட்சி தற்போது பஞ்சாபில் ஆட்சி செய்து வருகிறது. மேலும், 2023-ஆம் ஆண்டில் தோ்தல் ஆணையத்தால் தேசிய கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. கட்சியின் தோ்தல் சின்னம் ஒரு துடைப்பம் ஆகும். ஆம் ஆத்மி கட்சி முன்பு தில்லியில் தொடா்ச்சியாக இரண்டு முறை ஆட்சியைப் பிடித்தது.

தில்லியில் கட்சி ஆட்சியில் இருந்த முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் ஏதும் இல்லை. முந்தைய ஆண்டுகளில், கேஜரிவால் கொண்டாட்டங்களில் பங்கேற்று கட்சி தொண்டா்களிடையே உரையாற்றுவாா். ஆனால், இந்த முறை அவா் அவ்வாறு செய்யவில்லை. இந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்காக ஆம் ஆத்மி தில்லி பிரிவின் தலைவா் சௌரவ் பரத்வாஜ் கட்சி அலுவலகத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினாா்.