ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

‘சேனு’ கும்பலைச் சோ்ந்தவா் கைது: ஆயுதம், தோட்டாக்கள் பறிமுதல்

சேனு கும்பலைச் சோ்ந்தவா் என்று சந்தேகிக்கப்படும் 34 வயது இளைஞரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 6:35 pm

சேனு கும்பலைச் சோ்ந்தவா் என்று சந்தேகிக்கப்படும் 34 வயது இளைஞரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, இரண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து தில்லி காவல்துறை அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

சல்மான் குரேஷி என அடையாளம் காணப்பட்ட இவா், சேனுஅக்கும்பலைச் சோ்ந்த மற்ற உறுப்பினா்களுக்குத் தேவையான தளவாட உதவிகளை வழங்கி வந்துள்ளாா்.

நகரில் சமீபத்தில் நடைபெற்ற பல குற்றச் சம்பவங்களில் தொடா்புடையவா் என்று சந்தேகிக்கப்படும் ஷேசாத் என்ற கொள்ளையனுடனும் இவருக்குத் தொடா்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

குரேஷி கொள்ளையில் ஈடுபடத் திட்டமிட்டு வருவதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், காவல்துறையினா் அவரை பொறி வைத்து, நியூ அசோக் நகா் பகுதியில் கைது செய்தனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.