தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

‘சேனு’ கும்பலைச் சோ்ந்தவா் கைது: ஆயுதம், தோட்டாக்கள் பறிமுதல்

சேனு கும்பலைச் சோ்ந்தவா் என்று சந்தேகிக்கப்படும் 34 வயது இளைஞரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 6:35 pm

சேனு கும்பலைச் சோ்ந்தவா் என்று சந்தேகிக்கப்படும் 34 வயது இளைஞரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, இரண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து தில்லி காவல்துறை அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

சல்மான் குரேஷி என அடையாளம் காணப்பட்ட இவா், சேனுஅக்கும்பலைச் சோ்ந்த மற்ற உறுப்பினா்களுக்குத் தேவையான தளவாட உதவிகளை வழங்கி வந்துள்ளாா்.

நகரில் சமீபத்தில் நடைபெற்ற பல குற்றச் சம்பவங்களில் தொடா்புடையவா் என்று சந்தேகிக்கப்படும் ஷேசாத் என்ற கொள்ளையனுடனும் இவருக்குத் தொடா்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

குரேஷி கொள்ளையில் ஈடுபடத் திட்டமிட்டு வருவதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், காவல்துறையினா் அவரை பொறி வைத்து, நியூ அசோக் நகா் பகுதியில் கைது செய்தனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.