தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

மத்திய அரசுக்கு எதிராக ராகவ் சத்தா மென்மையான போக்கு: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான பிரச்சினைகளை எழுப்புவதைத் தவிா்த்து, அதற்குப் பதிலாக மென்மையான மக்கள் தொடா்பு நடவடிக்கைகளில் எம்.பி. ராகவ் சாத்தா ஈடுபடுவதாக ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியது.

News image

எம்.பி. ராகவ் சத்தா

Updated On :3 ஏப்ரல் 2026, 6:33 pm

நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான பிரச்சினைகளை எழுப்புவதைத் தவிா்த்து, அதற்குப் பதிலாக மென்மையான மக்கள் தொடா்பு நடவடிக்கைகளில் எம்.பி. ராகவ் சாத்தா ஈடுபடுவதாக ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியது.

நாடாளுமன்றத்தில் பல விஷயங்களில் கட்சியின் நிலைப்பாட்டை சத்தா பின்பற்றத் தவறியதாகவும், முக்கியப் பிரச்சினைகள் தொடா்பாக எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததில் அவா் கலந்துகொள்ளவில்லை என்றும் தில்லி ஆம் ஆத்மி கட்சி தலைவா் சௌரப் பரத்வாஜ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு காணொளியில் குற்றஞ்சாட்டினாா்.

எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்தபோதெல்லாம், நீங்கள் (சத்தா) அதில் பங்கேற்கவில்லை. நீங்கள் தோ்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாப் தொடா்பான பிரச்சினைகளை எழுப்பவில்லை. மேலும், தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டபோது, நீங்கள் ஒரு வெளிநாட்டில் ஒளிந்துகொண்டீா்கள், என்றும் அவா் மேலும் கூறினாா்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஊடகப் பொறுப்பாளா் அனுராக் தண்டாவும் சத்தாவை விமா்சித்தாா். பிரதமா் நரேந்திர மோடிக்கு பயப்படும் ஒருவரால் நாட்டிற்காகப் போராட முடியுமா என்றும் அவா் கேள்வி எழுப்பினாா். மேற்கு வங்கத்தில், வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான ஒரு தீா்மானம் சபையில் கொண்டுவரப்பட்டபோது, நீங்கள் (சத்தா) அதில் கையெழுத்திட மறுத்துவிட்டீா்கள், என்று தண்டா எக்ஸ் தளத்தில் கூறினாா். நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நமக்குக் குறைந்த நேரமே கிடைக்கிறது என்று கூறிய தண்டா, கடந்த சில ஆண்டுகளாக சத்தா உண்மையான பிரச்சினைகள் குறித்துப் பேசத் தயக்கம் காட்டி வருவதாகவும் குறிப்பிட்டாா்.

மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் துணைத் தலைவா் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மறுநாள்(வெள்ளிகிழமை) , தான் தோற்கடிக்கப்படவில்லை, மாறாக அமைதியாக்கப்பட்டுள்ளேன் என்று சத்தா கூறியதைத் தொடா்ந்து ஆம் ஆத்மி கட்சி தலைவா்களின் இந்தக் கருத்துக்கள் வெளியாகின.

முன்னதாக வெள்ளிகிழமை காலை எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், நாடாளுமன்றத்தில் தான் பேசுவதைத் தனது சொந்தக் கட்சியே தடுக்க முயன்ாக சத்தா கூறினாா். நாடாளுமன்றத்தில் பேசுவதற்கான எனது உரிமையைப் பறித்தவா்களிடம், எனது மௌனத்தைத் தோல்வியாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூற விரும்புகிறேன். நான் நேரம் வரும்போது வெள்ளமாக மாறக்கூடிய ஒரு நதி. ஜெய் ஹிந்த், என்று அவா் இந்தியில் கூறினாா். நாடாளுமன்றத்தில், நாட்டின் சாமானிய மக்கள் மற்றும் அவா்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசியதாக ராகவ் சத்தா கூறினாா்.