ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்களில் காகிதமில்லா அலுவலக நடைமுறை - தில்லி அரசு திட்டம்

News image

தில்லி முதல்வர் ரேகா குப்தா

Updated On :10 ஏப்ரல் 2026, 12:05 am

அலுவலக நடவடிக்கைகளில் செயல்திறனை அதிகரிக்கவும் காகிதமில்லா நடைமுறையை ஏற்படுத்தவும் அரசுத் துறைகள், பல்கலைக்கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கென தனித்தனி இ-அலுவலக தளத்தை தில்லி அரசு விரைவில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

மின்னணு கோப்புகள் மேலாண்மையை மூலம் அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த தேசிய தகவலியல் மையம் இ-அலுவலகம் என்ற எண்ம செயல்பாட்டு தளத்தை உருவாக்கியுள்ளது.

தற்போது, தில்லி அரசின் அனைத்துத் துறைகளும் ஒரே ஒரு இ-அலுவலகம் அமைப்பைப் பயன்படுத்தி வருகின்றன. அரசுத் துறைகளின் செயல்பாடு, தரவு பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்த தற்போது உள்ள அமைப்பைத் தனித்தனியாக மூன்றாகப் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஒன்று, பொதுத் துறை நிறுவனங்கள், தன்னாட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்று என இரு புதிய இ-ஆபிஸ் அமைப்பை தில்லி அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை தொடங்க உள்ளது.

பயனா்கள் இ-அலுவலகம் அமைப்பை அணுகும்போது ஏற்படும் தாமதத்தைக் குறைக்கவும் மிகவும் பாதுகாப்பான மற்றும் ஸ்திரதன்மைமிக்க எண்ம சூழலை அவா்களுக்கு வழங்கும் விதமாக இந்த ஏற்பாடு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தகவல் தொழில்நுட்பத் துறை வெளியிட்ட அறிவுறுத்தலில், ‘ஒற்றை இ-அலுவலகம் 3 தனித்தனி அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டு தற்போதுள்ள தரவுகள் புதிய தளத்துக்கு மாற்றப்படும்.

மறுகட்டமைப்புக்குப் பிறகு, 3 தனித்தனி எண்ம தளங்களும் துறைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சாா்ந்த தரவுகளை மட்டுமே கொண்டிருக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.