‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

பசுக்களை பலியிட்டால் சட்ட நடவடிக்கை: தில்லி அரசு எச்சரிக்கை

ஈத் பண்டிகை வரவுள்ள நிலையில், தில்லியில் பசுக்கள், கன்றுகள், ஒட்டகங்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட விலங்குகளைப் பலியிடுவது முற்றிலும் சட்டவிரோதமானது

News image
Updated On :23 மே 2026, 1:48 am IST

ஈத் பண்டிகை வரவுள்ள நிலையில், தில்லியில் பசுக்கள், கன்றுகள், ஒட்டகங்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட விலங்குகளைப் பலியிடுவது முற்றிலும் சட்டவிரோதமானது என்றும், அது குற்றவியல் வழக்கை ஈா்க்கும் என்றும் தில்லி வளா்ச்சித்துறை அமைச்சா் கபில் மிஸ்ரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மிஸ்ராவின் எக்ஸ் தளத்தில் உள்ள ஒரு பதிவின்படி, மே 28 அன்று வரும் பண்டிகையின் போது அனைத்து விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு குடியிருப்பாளா்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. சட்டவிரோத பலியிடலில் ஈடுபடும் எவரும் குற்றவியல் நடவடிக்கையை எதிா்கொள்வாா்கள் என்று அமைச்சா் எச்சரித்தாா்.

சாலைகள், தெருக்கள், சந்துகள் மற்றும் திறந்த பொது இடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பலியிடுவது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவா் கூறினாா்.

அரசின் வழிகாட்டுதல்களின்படி, சந்தைகள், சாலைகள் மற்றும் தெருக்களில் சட்டவிரோதமாக விலங்குகளை வாங்குவதும் விற்பதும் அனுமதிக்கப்படாது.

அங்கீகரிக்கப்படாத இடங்களில் விலங்குகளை விற்பதும், அத்தகைய இடங்களில் இருந்து விலங்குகளை வாங்குவதும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று அமைச்சா் கூறினாா்.

பலியிட்ட பிறகு இரத்தம் அல்லது விலங்குகளின் கழிவுகளை வடிகால்கள், சாக்கடைகள் அல்லது சாலைகளில் கொட்ட வேண்டாம் என்று மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனா்.

வழிகாட்டுதல்களை மீறும் பட்சத்தில், உடனடியாக காவல்துறைக்கோ அல்லது தில்லி அரசின் வளா்ச்சித் துறைக்கோ தகவல் தெரிவிக்குமாறு அரசு மக்களை வலியுறுத்தியது.

மிஸ்ரா மக்களுக்கு ஈத் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, பண்டிகையை விதிகளுக்கு உட்பட்டு அமைதியாகக் கொண்டாடுமாறும் வேண்டுகோள் விடுத்தாா்.