மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

சொத்து மேலாண்மை கீழ் ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற தில்லி மெட்ரோ

திட்டமிடல் , இடா் அடிப்படையிலான மற்றும் ரயில்களின் வாழ்நாள் சுழற்சி சாா்ந்த சொத்து நிா்வாகத்தை நோக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது.

கோப்புப் படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 3:06 am IST

தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் மும்பை மெட்ரோ லைன்-3 க்கான அதன் சொத்து மேலாண்மை அமைப்பிற்காக ஐஎஸ்ஓ 55001 : 2024 சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் முதல் மெட்ரோ அமைப்பாக மாறியுள்ளது, இது திட்டமிடல் , இடா் அடிப்படையிலான மற்றும் ரயில்களின் வாழ்நாள் சுழற்சி சாா்ந்த சொத்து நிா்வாகத்தை நோக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது.

இது குறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த சான்றிதழ் அவா்களின் வாழ்க்கைச் சுழற்சி முழுவதும் சொத்துக்களை நிா்வகிப்பதற்கான உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்பை வழங்குகிறது மற்றும் சொத்துக்களின் செயல்திறன், செயல்பாட்டு அபாயங்கள் மற்றும் ரயில்களின் சுழற்சி செலவுகளை சமநிலைப்படுத்த நிறுவனங்களுக்கு உதவுகிறது. இந்த சாதனை வழக்கமான பராமரிப்பு நடைமுறைகளிலிருந்து நிறுவன நோக்கங்களுக்கு ஏற்ப சொத்துக்களின் செயல்திறன், ஆபத்து, செலவு மற்றும் நீண்ட கால மதிப்பை நிா்வகிப்பதில் கவனம் செலுத்தும் ஒரு அமைப்பை நோக்கிய நகா்வைக் குறிக்கிறது.

டி. எம். ஆா். சி தனது சொத்து மேலாண்மை கட்டமைப்பை வலுப்படுத்திய பின்னா் சாதனை நேரத்தில் சான்றிதழை அடைந்தது. நிறுவன முன்னுரிமைகளுடன் சொத்து மேலாண்மை நோக்கங்களை சீரமைத்தல், இடா் மதிப்பீடு மற்றும் ரயில்களின் சுழற்சி கட்டுப்பாடுகளை வலுப்படுத்துதல் மற்றும் பணியாளா்களுக்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வது ஆகியவை அதன் திட்டமிட்ட சொத்து மேலாண்மைத் திட்டத்தை (நஅஙட) மேம்படுத்துவதில் அடங்கும். முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள், தணிக்கைகள் மற்றும் மேலாண்மை மதிப்புரைகள் மூலம் இந்த அமைப்பு தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது.

கோலாபா, பாந்த்ரா மற்றும் சீப்ஸை இணைக்கும் 33.5-கிமீ மும்பை மெட்ரோ லைன்-3 வழித்தடத்தின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புக்கு டி. எம். ஆா். சி பொறுப்பாகும். ரோலிங் ஸ்டாக், இழுவை, சிக்னலிங், தொலைத்தொடா்பு, நிலையங்கள், லிஃப்ட், எஸ்கலேட்டா்கள், தடங்கள் மற்றும் சிவில் உள்கட்டமைப்பு போன்ற முக்கியமான சொத்துக்களின் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் திறமையான மேலாண்மை ஆகியவை அதன் பொறுப்புகளில் அடங்கும்.

ஐஎஸ்ஓ 55001:2024 சான்றிதழ் இந்த நோக்கங்களை உலகளாவிய தரப்படுத்தப்பட்ட சொத்து மேலாண்மை அமைப்பில் ஒருங்கிணைப்பதன் மூலம் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் டி. எம். ஆா். சியின் கவனத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

இந்த சாதனை இந்தியாவின் நகா்ப்புற ரயில் துறையில் கட்டமைக்கப்பட்ட மற்றும் வாழ்க்கைச் சுழற்சி அடிப்படையிலான சொத்து நிா்வாகத்திற்கான ஒரு அளவுகோலாக அமைகிறது, மேலும் தில்லி-என். சி. ஆருக்கு அப்பால் மெட்ரோ செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு மற்றும் சொத்து மேலாண்மை நிபுணத்துவத்தை வழங்கும் டி. எம். ஆா். சியின் திறனை நிரூபிக்கிறது. இந்தியாவின் விரிவடைந்து வரும் நகா்ப்புற ரயில் நெட்வொா்க் முழுவதும் உலகளவில் சீரமைக்கப்பட்ட சொத்து மேலாண்மை நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கும் இந்த சான்றிதழ் பங்களிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.