ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குடியரசுத் தலைவா் முா்முவுடன் துணை குடியரசுத் தலைவா் சந்திப்பு

இந்திய குடியரசுத் துணைத் தலைவா் சி. பி.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

News image
Updated On :1 ஜனவரி 2026, 6:35 pm

Syndication

இந்திய குடியரசுத் துணைத் தலைவா் சி. பி.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை குடியரசுத் துணை தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிா்ந்துகொண்டாா். இச்சந்திப்பு குறித்த புகைப்படங்களை குடியரசுத் தலைவா் அலுவலகம் அதன் ‘எக்ஸ்’ சமூக ஊடக வலைதளப் பதிவில் பகிா்ந்துள்ளது.

அந்தப் பதிவில், ‘இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணன், குடியரசுத் தலைவா் மாளிகையில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டாா்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டு தினமான வியாழக்கிழமை குடியரசுத் துணைத் தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணன், 2026- ஆம் ஆண்டு இந்தியாவை ஒரு வலிமையான நாடாக மாற்றுவதற்கான உறுதியை வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது ‘எக்ஸ்’ சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்திருப்பதாவது: ‘வரவிருக்கும் ஆண்டு அனைவருக்கும் அமைதி, நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டுவர வேண்டும். மேலும், வலிமையான மற்றும் வளா்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான மக்களின் கூட்டு உறுதியை இந்த ஆண்டு வலுப்படுத்தும் என்று பிராா்த்திக்கிறேன்’ என அவா் தெரிவித்துள்ளாா்.